செவ்வாய், 31 மார்ச், 2015

சக்ரா தியானம்

சக்ரா தியானம்
சக்ரா தியானம் செய் முறை

(குறிப்பு: கூடுமான அளவு எளிமையாக இந்த தியான செய் முறை விளக்கப்பட்டு இருந்தாலும் தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது)

சக்ராக்கள் அமைந்துள்ள இடங்கள், அவைகளுக்குத் தரப்பட்டிருந்த சின்னங்கள், மந்திர பீஜ ஒலிகள் ஆகியவற்றை நாம் முன்பு பார்த்தோம். இனி சக்ரா தியானம் செய்வது எப்படி என்று பார்ப்போம். ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இதில் அந்தந்த சக்ராக்களின் பெயரைச் சொல்வதும், மந்திரங்களைச் சொல்வதும் சத்தமாகவோ, மனதினுள்ளோ உங்கள் வசதிப்படி சொல்லலாம். அந்தந்த சக்ராவின் சின்னங்களை உருவகப்படுத்திக் கொள்ள சிரமம் இருந்தால் அந்தந்த சக்ராவின் நிறமுள்ள சக்கரங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள். மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் “ஓம் மூலாதார” என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்

3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் “ஓம் ஸ்வாதிஸ்தான” என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.

4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்” என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் ’ஓகூம் சத்யம் ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.

இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும். எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள்.

(குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது. மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.)

இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி.

http://ganesapandian.blogspot.in/

மனித உடலில் பிரபஞ்ச சக்திகள்

மனித உடலில் பிரபஞ்ச சக்திகள்


பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்பு ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது.
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே
என்று சித்தர் பாடுகிறார். பொதுவாக எலும்புக்கூடு, நரம்பு, தசை, தமனி, முதலானவைகள் தான் மனிதன் என்று சொல்வது அறியாமை என்கின்றனர் சித்தர்கள். அண்டத்தில் அதாவது பிரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்கிறார். பிண்டம் என்றால் உடம்பைக் குறிக்கும்.பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது.சுக்கிலமும் சுரோனிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு மூன்றும் சேர்ந்து மண் உருவு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என நிலைப்படுகின்றது.இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள் தாவரப் பொருட்கள் அனைத்தும் சங்கமமாகின்றது. மனித உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களோடு தொடர்புடைய தாகவும், இந்த தத்துவங்களின் அடிப்படையில்தான் மனித உயிர் அனைத்து சக்திகளையும் அடக்கி ஆளும் தன்மை கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.சூரிய சக்தியானது மனிதனின் தமரகம் என்னும் இதயத்துடன் தொடர்புடையது என்றும், மூளை நரம்புகள் அனைத்தும் சந்திரனோடு தொடர்பு உடையவை என்றும், பித்தப்பை இரத்தம், செவ்வாயோடு தொடர்பு உடையவை என்றும் உடலை பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.
சூரிய சக்தி – தமரகம் (இதயம்)
சந்திர சக்தி – மூளை நரம்புகள்
செவ்வாய் – பித்தப்பை, இரத்தம் (செந்நீர்)
சுக்கிரன் – இடுப்புப் பகுதி
புதன் – நுரையீரல்
குரு (வியாழன்) – கல்லீரல்
சனி – மண்ணீரல்
ஆகவே மனித உடலானது கிரகங்கள் (கோள்கள்) நட்சத்திரங்களின் ஆதிக்கத்தைப் பொறுத்து மாறுபாடு அடைகிறது என்பது புலனாகிறது.பிரபஞ்ச சக்தியை அடைந்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் இந்த கோள்களின் ஆதிக்கத்தை மாற்றியும், நட்சத்திரங்களின் தன்மைகளை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவர்கள். சில சமயங்களில் இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி இயக்குபவர்களும் இவர்களே.பிரபஞ்சத்தில் மனிதனே முதன்மையானவ னாகவும் அவன் தன்னைத்தானே அறிந்து கொள்பவனாகவும் இருக்கிறான். இதையே ஒளவையார் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று பாடினார்.இதனால்தான் மனிதன் ஐம்பெரும் பூதங்களை அடக்கி ஆளும் சக்தியைப் பெற்று இயற்கையின் போக்கை இயக்கவும், மாற்றவும் வல்லவன் ஆகிறான் என்கின்றனர்.இந்த பிரபஞ்ச சக்தியை அடைவது பற்றி நாம் வர்மத்தின் மர்மங்கள் என்ற தொடரில் திலர்த கால ஒளியின் மூலம் இந்த சக்தியை அடைவது பற்றி விரிவாக அறிந்துகொண்டிருப்பீர்கள்.இதுபோல் மனித உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள் ஆதாரங்களுடன் தொடர்பு உள்ளது போல் ஐம்பூதங்களின் ஆதிக்கம் மனித சக்தியிலும் நிறைந்துள்ளது. ஆகையால் மனிதன் ஐம்பூதங்களை அடக்கியாள முடிகிறது. இதைத்தான் சித்தர்கள் பல நூல்களிலும், சோதிட சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு கோள்களின் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக கணித்துக் கூறியுள்ளனர்.பஞ்ச பூதங்கள் வாத பித்த கபமாக நிறைந்து அதனதன் நிலைப்பாட்டுடன் உள்ளது. பிரபஞ்சத்தில் கோள்களின் ஆதிக்கம் மாறும்போது உடலிலும் வாத பித்த கப மாறுபாடு ஏற்படுகிறது. இதனால் மனிதன் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.இப்படிப்பட்ட கோள்களின் ஆதிக்கத்தைத் தெரிந்துகொண்டு அதன்மூலம் மனிதன் நோய் நொடியின்றி தன்னைக் காத்துக்கொள்ளவே வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் போன்றவற்றை சித்தர்கள் உருவாக்கினர்.

மனித உடலானது பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த ஐம்பெரும் பூதங்கள் நம் உடலில் செயல்படுகிறது.ஐம்பூதங்களின் தன்மையினால் உருவான உடலானது அண்டத்தின் செயல்பாடுகளால்தான் இயக்கப் படுகிறது.இத்தகைய உடலை இயக்கும் உயிர்ஸ்தானம் எங்குள்ளது என்பதை தியானம் மூலமே அறிந்துகொள்ள முடியும்.சித்தர்கள் தங்களின் தவப்பயனால், உடலின் சாராம்சங்களை அறிந்து கொண்டு மனதை செம்மைப்படுத்தி ஒருநிலைப்படுத்தும் போது உடலில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒரே நேர்க்கோட்டில் வரும்போது திலர்த காலம் என அழைக்கப்படும் சுழிமுனையில் ஒளியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்தான் உடலில் பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளுக்கும், கோள்களின் ஆதிக்கத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர் இதைத்தான் சித்தர்கள் அகாரம் உகாரம் மகாரம் என்ற சொல்லின் வடிவம்தான் ‘ஓம்’ என்று அழைத்தனர். இந்த ‘ஓம்’ என்ற சொல் எந்த ஒரு மதத்தினருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. மனிதனின் முகம் ஓம் என்ற வடிவில் அமைந்துள்ளது என சித்தர்கள் கூறுகின்றனர்.ஆகையால்தான் தமிழ்மொழியில் ‘அ’ என்ற எழுத்தை முதல் உயிரெழுத்தாக கொண்டுள்ளது.திருவள்ளுவர் தன்னுடைய திருக் குறளில்


அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
என்று பாடியுள்ளார்.சிலர் திருவள்ளுவர் இறைவணக்கம் பாடவில்லை என்று கூறுவர். ஆனால் அகர என்ற சொல்லே இறைவனை வணங்கும் முதல் சொல்லாகும். மனித உடலின் பிரபஞ்சத்தை நன்கு அறிந்து அதனையே முதல் குறளில் முதல் வரியாகவும் இறைவணக்க பாடலாகவும் பாடியுள்ளார்.
அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்த்திடவே ஆகும் முக்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப்பார்த்து
குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன்
முக்கோண நிலையதாமே சித்தர் பாடல்
“பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்”
இந்த ஓங்கார சக்திதான் உடலை இயக்கும் மாபெரும் சக்தி என்கின்றனர் சித்தர்கள். இத்தகைய சக்தியை அடைந்துவிட்டால் மனம் என்னும் அடங்காத குதிரையை அடக்கி அதன்மேல் சவாரி செய்வதுபோல் கம்பீரம் கிடைக்கும் என்கின்றனர்.
மேலும் அவர்கள்
அம் என்று இரு
இம் என்று இரு
உம் என்று இரு
என்று கூறுகின்றனர். பிராண வாயுவின் செயல்பாடுகள் இந்த வடிவில்தான் செயல்படுகின்றது. தவக்கோலத்தில் பிராண வாயுவை அம், இம், உம் என்ற நிலையில் செயல்படுத்தினால் மூலாதாரத்தில் இருந்து எழும்பும் (அதாவது குண்டலினி) ஓங்கார சக்தி மேல் நோக்கி எழுந்து தனஞ்செயன் வாயு அடங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து சுழிமுனையை அதாவது திலர்த காலத்தை அடைகின்றது. இதனால்தான் சித்தர்கள் அண்ட சாரத்தினை தங்களின் ஆற்றலினால் மாற்றி அமைக்க முடிந்தது.சாதாரணமாக மனித உடலில் கிலேசம் என்ற நீர் உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீரை ஒருநிலைப் படுத்தும்போது உருவாகும் நீரைத்தான் அமிர்த கலை நீர் என்று அழைக்கின்றனர். இந்த கிலேச நீர் என்பது ஒன்றை பார்த்தவுடன், கேட்டவுடன் அல்லது உணர்ந்தவுடன் உடலில் ஊறும் ஒரு அபரிமிதமான நீராகும். இந்த நீர் எண்ணங்களுக்கு ஏற்ப உற்பத்தியாகிறது… மாறுபடுகிறது.உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அல்லது ஒரு பெண் ஒரு ஆணைப் பார்க்கும்போது உடலில் ஒருவகையான மனக் கிளர்ச்சி உண்டாகும். அப்போது சுரக்கும் நீர் மனக் கிலேச நீராகும். அதுபோல் தொடும்போது, உணர்ச்சிவசப்படும்போது, இனிமையான பாடலைக் கேட்கும்போது பலவிதமான எண்ணங்களை வெளிப்படுத்தும் போது உடலில் மாற்றம் ஏற்பட்டு மனநிலை மாறி கிலேச நீர் உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீர்தான் அனைத்து செயல்பாட்டினையும் தூண்டும் சக்தியாக விளங்குகிறது.மூலாதாரத்திலிருந்து உயிர் சக்தி சீற்றமாகி மேல் எழும்பி ஆதாரங்களைத் தூண்டி தனஞ்செயனை தொடும்போது கிலேசன் என்னும் அமிர்த நீர் உற்பத்தியாகிறது. இதைத்தான் சிவனின் தலையிலிருந்து உற்பத்தியாகும் கங்கை நீராக புராணங்களில் சித்தரிக்கின்றனர்.ஒருவரை பார்க்கும்போதும், பேசத் தூண்டும் போதும் கிலேச நீர் அபரிமிதமாக தோன்றி எண்ணங்களை மேலோங்கச் செய்கிறது.அதிக மகிழ்ச்சியடையும்போது ஆனந்தக் கண்ணீராக வெளிவருவதற்கும், துக்கமடையும்போது கண்ணீராக வெளிவருவதற்கும் இந்த கிலேச நீர்தான் காரணம். இந்த கிலேச நீர் வாத, பித்த கப உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு எவ்வாறு மாறுகிறது, அப்படி மாறும்போது உடலில் அதிக மாற்றம் உருவாகிறது.

ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம். மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.
நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்
நேரான தேயுவோடு வாயுமாகும்
அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்
அரிதான பிருதிவியு மண்ணு மாகும்
தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு
தாக்கான வாயுவது காற்றுமாகும்
இகழ்ந்தவா காயமது சத்தமாகும்
ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே
யூகி வைத்திய சிந்தாமணி
மண்ணின் கூறுகள் மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
நீரின் கூறு (புனலின் கூறு)நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நெருப்பின் கூறு உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.
வளியின் (காற்று) கூறுஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
விண்ணின் (ஆகாயம்) கூறுஇன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)
திருவாணைக்கால் நீர்
திருவண்ணாமலை நெருப்பு
காளஹஸ்தி காற்று
சிதம்பரம் ஆகாயம்.
பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச் செய்துள்ளனர்.

Thanks to http://angelinmery.weebly.com/yoga.html
https://suzhimunai.wordpress.com/

மனிதனின் சக்தி நிலை !!!

ஆதித்ய ஹ்ருதயம் - 1


ஆதித்ய ஹ்ருதயம் - 1

உலகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான சக்தியை சரியான தொலைவிலிருந்து வழங்கி வருகின்ற சூரியனை வணங்குவது தொன்று தொட்டு உலகமெங்கும் நடைபெற்று வந்திருக்கிறது. பெருமதங்கள் தோன்றிய போது முன்பிருந்த சூரிய வழிபாடான சௌரம் அந்தப் பெருமதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கும் நேரடியாக சூரியனை மட்டும் வழிபடாமல் பெருமதங்களின் தெய்வ உருவில் கதிரவனை வணங்கிவருகிறார்கள்.

இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். சூரிய நமஸ்காரம் என்று ஒரு வழிபாட்டு முறை சேரலமாம் கேரளத்தில் இருக்கிறது. தமிழகத்தில் பலரும் அதிகாலையில் நீராடி விட்டு சூரியனை நோக்கி வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சூரிய பகவானுக்கான வடமொழிப் பனுவல் என்று எண்ணும் போது மனத்தில் முதன்மையாக வந்து நிற்பது 'ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்'. இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வரும் ஒரு பகுதி. இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை. அடியேன் தினந்தோறும் காலையில் சொல்லிக் கொண்டிருந்த ஸ்தோத்திரம் இது. (இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் சொல்லாவிட்டாலும் நினைவிற்கு வரும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்). ஒன்பது முறை தொடர்ந்து சொல்லி நினைத்த காரியங்களில் வெற்றி பெற்றதும் உண்டு.

பகலவன் இராசிச் சக்கரத்தின் கடைசி இராசியான மீனராசியிலிருந்து (பங்குனி) முதல் இராசியான மேஷராசிக்குச் (சித்திரை) செல்லும் இந்த நேரத்தில், இராமபிரானின் திருவவதார நன்னாள் வருகின்ற இந்த நேரத்தில் இருவர் தொடர்பும் உடைய இந்த வடமொழிப் பனுவலைப் படிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த இடுகை தொடங்கி இனி வரும் இடுகைகளில் சூரிய தேவனை முழுமுதற்கடவுளாகப் போற்றும் இந்தப் பனுவலைப் பொருளுடன் பார்ப்போம்.

இராம இராவண யுத்தத்தின் தொடக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சி இது. முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

ததோ யுத்த பரிச்ராந்தம் சமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய சமுபஸ்திதம் 1

tatO yuddha parisrantam samarE chintayA Sthitam
rAvanam chAgratO drustvA yuddhAya samupasthitam 1

ததோ - அந்த இராமன்
யுத்த பரிச்ராந்தம் - போர்க்களத்தில்
சமரே சிந்தயா ஸ்திதம் - போர் செய்வதைப் பற்றிய சிந்தனைகளுடன் நிற்பதை
அக்ரதோ த்ருஷ்ட்வா - முதலில் பார்த்துவிட்டு (பின்னர்)
யுத்தாய சமுபஸ்திதம் - போர் செய்வதற்காக நெருங்கி வரும்
ராவணம் ச த்ருஷ்ட்வா - இராவணனையும் பார்த்தார் அகத்திய முனிவர்

போர்க்களத்தில் போருக்கு முனைப்பாக நிற்கும் இராமனையும் இராவணனையும் கண்டார் அகத்தியர். அகத்தியர் போர்க்களத்திற்கு ஏன் வந்தார் என்பதை அடுத்த சுலோகம் சொல்கிறது.

தைவதைஸ்ச சமாகம்ய த்ரஷ்டும் அப்யாகதோ ரணம்
உபாகம்ய அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: 2

daivathaisca samAgamya drastum abhyAgatO ranam
upAkamya abraviid rAmam agastyO bhagavAn rshi: 2
த்ரஷ்டும் அப்யா கதோ ரணம் - போரைப் பார்ப்பதற்காக வந்திருக்கும்
தைவத ஏவ ச - தேவர்களுடனே
சம ஆகம்ய - வந்திருக்கும்
அகஸ்த்யோ பகவான் ருஷி: - ரிஷியான அகத்திய பகவான்
உபாகம்ய அப்ரவீத் ராமம் -அருகில் வந்து இராமனிடம் பேசத் தொடங்கினார்

தேவர்கள் எல்லாம் இராம இராவண யுத்தத்தைப் பார்ப்பதற்காகத் திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பல ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களின் நடுவே அகத்தியரும் இருக்கிறார். போருக்கு முனைப்பாக இருக்கும் இராம இராவணர்களைப் பார்த்த பின்னர் அகத்தியர் இராமனை நெருங்கி வந்து பின்வருமாறு பேசத்தொடங்கினார்.

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் சனாதனம்
யேன சர்வான் நரீன் வத்ஸ சமரே விஜயிஷ்யஸி 3

rAma rAma mahAbAhO srunu guhyam sanAtanam
yEna sarva nareen vatsa samarE vijayisyasi 3

ராம ராம மஹாபாஹோ - பெரும் தோள் வலிமை கொண்ட இராமா!
யேன சர்வான் நரீன் - எதன் மூலம் எல்லா மக்களும்
சமரே விஜயிஷ்யஸி - போர்க்களத்தில் வெல்கிறார்களோ
சனாதனம் - காலம் காலமாக அழிவில்லாத
குஹ்யம் - (அந்த) இரகசியத்தை
ச்ருணு - கேள்
வத்ஸ - குழந்தாய்

தோள் வலிமையில் சிறந்த இராமா! குழந்தாய்! என்றும் அழிவில்லாத எந்த இரகசியத்தால் மக்கள் போர்க்களங்களில் வெல்கிறார்களோ அந்த மறைபொருளை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். கேள்.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம் 4

Aditya hrudhayam punyam sarva satru vinAsanam
jayAvaham japEnnithyam akshayam paramam sivam 4

ஆதித்ய ஹ்ருதயம் - (அந்த இரகசியத்திற்குப் பெயர்) ஆதித்ய ஹ்ருதயம்
புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் - எல்லாவிதமான எதிரிகளையும் அழிப்பது (உட்பகை, வெளிப்பகை இரண்டையும்)
ஜய ஆவஹம் - வெற்றியைத் தருவது
ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் - அழிவற்றது
பரமம் - மிகப்பெருமை கொண்டது
சிவம் - மங்களம் தருவது

புண்ணியத்தைத் தருவதும் எல்லா எதிர்ப்புகளையும் முறியடிப்பதும் வெற்றியைத் தருவதும் நாள்தோறும் பன்னிப் போற்றத் தகுந்ததும் அழிவற்றதும் பெருமை கொண்டதும் மங்களம் தருவதுமான அந்த இரகசியத்திற்குப் பெயர் ஆதித்ய ஹ்ருதயம்

ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம் 5

sarva mangala mAngkalyam sarva pApa pranAsanam
cintaa sOka prasamanam Ayurvardhanam utthamam 5

ஸர்வ மங்கள் மாங்கல்யம் - மங்களங்கள் எல்லாவற்றிலும் சிறந்த மங்களம் ஆனது.
ஸர்வ பாப ப்ரநாசனம் - எல்லா பாவங்களையும் அழிப்பது
சிந்தா சோக ப்ரசமனம் - கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர் வர்த்தனம் - வாழ்நாளை வளர்ப்பது
உத்தமம் - சிறந்தது

இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது.

அடுத்த சுலோகத்திலிருந்து சூரியனைப் போற்றத் தொடங்குகிறார்.
http://ganesapandian.blogspot.in/

யோகாசனம் !!!


யோகாசனம் !!!

யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய கேன !
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!

யோகத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும்.
1.இயமம்:பிறரை கொல்லாதிரு மனதாலும், உடலாலும்.பிரம்மசரித்திரு, தூய்மையாய் இரு-மனதாலும், உடலாலும்.இது இயமம்
2.நியமம்:மெய் வாய்யில் இறைமை, வாய்யில் எப்பொழுதும் மெய்,கலவாதிரு, களவாதிரு.இதுநியமம்.
3.ஆசனம்: ஆசான் இல்லாத ஆசனம் ஆதாரம் இல்லாத ஆசனம்.எங்கும் ஆசனம் எதிலும் ஆசனம்.உன்னை ஆக்கு ஆசனம். அதுவே இறையின் அரியாசனம்.
4.பிராணாயாமம்:உனது உயிர் சக்தியை வசமாக்கு- அதுவே பிராணனின் யாமம்.உனது நவ துவாரத்தில் பயணிக்கும் சக்தியை திறந்து மூடு.உன் உடல் எனும் புல்லாங்குழலின் துவாரங்கள் வழியே ஓடும் இசையாக மாறும் உனது உயிர்சக்தி.:(பிராணாயாமம்)
5.ப்ரதியாகாரம்:அஞ்சும் சிங்கங்களாக இருக்கும் ஞானேந்திரியத்தை ஐந்தும் சிங்கங்களாக்குபிற உலகில் நில்லாமல் அக உலகில் இருப்பதேப்ரதியாகாரம்.
6.தாரணை: நீரில் உள்ள சலனம் எண்ணெயில் இல்லை.நீர் இல்லா உலகில் எண்ணமில்லா நிலையே தாரணை.
7.தியானம்:செயல் கடந்து செயல் மறந்து அகம் அகழ்ந்து நின்று,தானே செய்யாமல் தானே செயல்படுவது தியானம்.
8.சமாதி:ஆதியானவனுடன் சமமாவதே சமாதி.நீயே பிரம்மனாம் அது அகம் பிரம்மாஸ்மி-யாம்.நீயே சத்தியம் அது தத்வமஸி.நீயே அனைத்துமாம் அதுவே சமாதி.
பொதுவாக யோகாசனம் என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர்.யோகத்தின் எட்டு அங்கங்கள் பகுதிதான் ஆசனம்.நீண்ட நேர தியானத்திற்கு புலக்கட்டுபாடு, மன ஒருமைப்பாடு தேவைப்படுகிறது. உடலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். எனவே சில ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். நீண்ட நேர தியான பயிற்சிக்கு ஆசனம் உதவுகிறது.

யோகம்+ஆசனம்(யோகாசனம்).அது நமது ரிஷிகள் நமக்கு அளித்த கொடை.பதஞ்சலி மகரிஷி யோகத்தை நமக்கு தொகுத்தளித்தார். அது இந்தியாவின் பெரும் செல்வம். பொதுவாக இன்றைய சூழ்நிலையில் மக்கள் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதைப் போல நோயுற்று இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம் என்று யாராலும் இன்று மகிழ்வாக சொல்ல முடியவில்லை.யோகத்தின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றுவர்கள் யாராக இருந்தாலும் இறைக் கலப்பு என்பது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று.உள்ளமும், உடலும் தூய்மையாக, ஆற்றலாக திகழ யோகாசனம் அவசியம். இதில் யோகம் என்பது உள்ளத் திற்காகவும், ஆசனம் என்பது உடலுக்காகவும் செய்யப்படுகிறது. இந்த யோகாசனத்தால் தான் மனித வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.யோகசனத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கிறார்கள். சிலர் உடலுக்குரிய ஆசனங்களை பயிலுவது தான் யோகாசனம் என்றும், ஒரு சிலர் தியானம் பயிலுவது யோகாசனம் என் றும், வேறுசிலர் மூச் சுப்பயிற்சி (பிராணாயமம்) செய்வதுதான் யோகாசனம் என்றும், இன்னும் சிலர் உண்ணாவிரதம் போன்ற விரதங்கள் இருப்பதே யோகாசனம் என்றும் கூறுகிறார்கள்.ஆனால் பதஞ்சலி ஒருவர் மட்டுமே உள்ளத்தின் ஆற்றலை பெருக்க யோகப்பயிற்சி, உடலின் ஆற்றலைப் பெருக்க ஆசனப் பயிற்சி என இரண்டையும் ஒன்று சேர்ப்பதே யோகாசனம் என தெளிவாக்கியவர்.பதஞ்சலி முனிவர் துவாபரா யுகத்தில் வாழ்ந்தவர். இவர் ஆதிசேஷன், லட்சுமணன், பலராமன், ராமானுஜர் என பல அவதாரங்கள் எடுத்தவர். இவர் இந்த உலக மக்களின் நலன் கருதி மனதுக்கு யோக சூத்திரமும், உடலுக்கு சரகம் என்ற வைத்திய நூலும், வாக்கிற்கு வியாகரண பாஷ்யம் போன்ற நூல்களை தந்தவர்.யோகம் என்றால் .கால்களை , கைகளை நீட்டி மடக்கி செய்யும் ஆசனப் பயிற்சிகள் என்பது யோகப்பயிற்சியின் ஒரு அங்கம் . மனிதர்களின் வயது மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப சிறிது ஆசனப் பயிற்சி செய்தால் போதுமானது.யோகப் பயிற்சியின் நோக்கம் மனிதன் தன் சுயத்தை உணர்ந்து இறைவன் என்பதை அறிந்து முடிவில் இறைக் கலப்பு அடைவதே.ஆனால் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட சிறிதளவு யோகப் பயிற்சியினை கையாண்டாலும் அது மனிதனின் உடல் மற்றும் மன நலத்தை சீர்ப்படுத்தும் ஒரு மருந்தாய் அமைகின்றது என்பதில் வியப்பில்லை.ஒரு நிமிடம் இந்த யோகப் பயிற்சியனை நமக்களித்த உண்மைக் குருமார்களின் தூய நோக்கத்தினை அவர்கள் நினைத்து தங்கள் வாழ்க்கையினை அதற்காக அவர்கள் அர்ப்பணித்து அதற்காக அவர்கள் சிறு புகழுக்கு கூட ஆசைப் படாமல் உலக உயிர்களின் மீது உள்ள கருணையினால் பயிற்சிகளை நெறிப்படுத்தி மனிதர்களின் தன்மைக்கு ஏற்றார்போல பயிற்சிகளை பயிற்றுவித்தவர்கள் ரிஷிகள், குருமார்கள். உடல் , மன சக்திகாகவும் மற்றும் ஜீவ முக்திக்காகவும் இன்று யோகத்தை ஆர்வத்துடன் பயில்பவர்கள் ஏராளம், ஏராளம். ஆரம்பத்தில் யோகம் பயில விரும்பும் , முயலும் அன்பர்கள் மிக்க மன விழிப்புடன் சரியான பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை சென்றடைந்து பயிற்சியினை அடிப்படை ஒழுக்கத்துடனும் , உயர்ந்த நோக்குடனும் பயில்வார்களேயானால் அவர்களுக்கு சத்குரு பதஞ்சலி மகரிஷியும், சித்த புருஷர்களும் அவர்களின் யோக வெற்றிக்கு துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

உலகில் 84 இலட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன.எனினும் இவைகளில்18 வகை ஆசனங்கள் தான் மிகமுக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன . மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தால் வெளியிடப்பட்ட இந்த வலைப்பதிவில் பொதுவாக யோக விஷயங்களையும் உடல் ஆசனங்களை பற்றியும் விளக்கப்டும். மேலும் ஏற்கனவே ஆசனங்கள் பயின்று தொடர முடியாமல் பாதியில் பயிற்சியினை நிறுத்தியவர்களுக்கு இந்த வலைப்பதிவு ஓரளவு நிவாரணம் தரும் என எண்ணுகிறோம் . யோகம்+ஆசனம் இந்த இரு பயிற்சிகளும் பரந்த கடலுக்கு ஒப்பாகும். இதில் முத்தெடுக்க முனைவோர்தக்க ஆசிரியர் ஒருவரிடம் முறையாக கற்பதனால் உடல் வளமும். மன நலனும் பெற்று இறையருளை அடைவது நிச்சயமே. சாதகர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிட கேந்திரந்திரத்தினை அணுகலாம். மனம் என்பது ஆத்ம ஸ்வரூபத்தின் ஒரு சக்தி. எல்லா நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. அன்நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது மனம் அங்கு தனியாக இருப்பதில்லை. நினைவுதான் மனதின் உருவம்.எண்ணம்.உலகின் எல்லா நிலைகளையும் உருவாக்குவது எண்ணங்களேயாகும்.வாழலும் சூழலும் எண்ணத்தை உற்பத்தி செய்கின்றன.உடம்பு உணர்வு.உடம்பு உயிர்த் தொகுதியில் சேர்ந்தாலும் அது ஒரு ஜடப் பொருளே. ஆனால்மூன்றாவதாக உணர்வுப் பொருள் அதனுடன் சேரும்போது வாழ்கை நடைபெறத்துவங்குகிறது.

ஐம்பூதங்கள் எனப்படுபவை நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன. இப்பிரபஞ்சத்திலுள்ள பல சூரிய மண்டலங்களில் ஒன்றான நாம் வாழும் இப்பூமியில் இவற்றின் உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர் வாழமுடியாது. உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்: இரத்தச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும் நீரும், தாது உப்புக்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப் பாதுகாக்க நெருப்பும், சுவாசிப்பதற்கு வசதியாகக் காற்றும், காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.நெல் வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன. நெல்லைக் குற்றி அரிசியும் தவிடும் எடுக்கிறோம். இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும் எமதுடலை சென்றடைகின்றன. இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.தமிழிலும் ஐம்பூதங்கள் என்று சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் அடிப்படையில் திருவள்ளுவர் பகுத்திருக்கின்றார். நிலம், நீர், நெருப்பு, வளி, விசும்பு என்று இப்புவியை ஐம்பெரும் ஆற்றல்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது தமிழர்களின் நம்பிக்கை. சீனப் பண்பாட்டின்படி ஐந்து பூதங்களும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகத் திகழ்கின்றன. இவற்றிலே நீர் பள்ளம் நோக்கிப் பாய்ந்து நிலத்தை ஈரப்படுத்துகிறது. நிலத்தில் ஈரம்பட்டு முளைக்கும் மரத்தின் விறகுகள் ஒன்றோடு ஒன்று உரசி நெருப்பு மூள்கிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்குள் புதைந்து உலோகமாக மாறுகிறது. பள்ளம் நோக்கிப் பாயும் நீர்; ஓங்கி உயர்ந்து எரிந்து வெப்பத்தை உண்டாக்கும் தீ; வளைந்தும் நிமிர்ந்தும் வளரும் மரம்; பலவடிவங்களில் அடித்தும், வார்த்தும் உருவாக்கப்படும் உலோகம்: வளமான மண் இந்த ஐந்து மூலகங்களும் படைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, இவை ஒன்றை ஒன்று அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. எப்படி என்கிறீர்களா? மரம் நெருப்பை உண்டாக்குகிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்கு உரமாகி, உலோகமாக மாறுகிறது; உலோகக் கருவி கொண்டு பூமியைத் தோண்டி தண்ணீர் எடுக்க முடிகிறது. தண்ணீரால் புதிய மரங்கள் முளைக்கின்றன. இவற்றின் இந்த படைப்பாற்றலுக்கு எதிரான அழிவாற்றலைப் பார்க்கலாமா? தண்ணீர் நெருப்பை அணைக்கிறது. நெருப்பு உலோகத்தை உருக்குகிறது. உலோகம் மரத்தை வெட்டுகிறது. மரம் மண்ணைக்கீறி முளைக்கிறது. மண் தண்ணீரில் கரைகிறது.

பல நூற்றாண்டு காலமாக சீன மக்கள் இந்தப் புவியை நான்கு பகுதிகளாக-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளாகவும், வசந்தம், இலையுதிர்காலம், கோடை, குளிர் என்று நான்கு பருவங்களாகவும், டிராகன், வெள்ளைப்புலி, சிவப்புப் பறவை, கருப்பு ஆமை என்று நான்கு விலங்குளாகவும் பிரித்தே பார்த்துவந்தனர். காலப் போக்கிலே, இவற்றுடன் மையப் பண்பு கொண்ட ஐந்தாவது அம்சம் ஒன்றும் சேர்ந்து கொண்டது. இறுதியில் மரம், நெருப்பு, மண், உலோகம், தண்ணீர் ஆகிய ஐம்பெரும் பூதங்கள் இந்தப் புவியை ஆட்டிப் படைக்கத் தொடங்கின. இவை இடைவிடாமல் உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகக் கருதப்படுகின்றன.சீன மக்களின் கருத்துப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் இந்த ஐந்து மூலகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஓராண்டின் ஐந்து பருவங்களும். ஐந்து நிறங்களும், ஐம்புலன்களும், ஐந்து சுவைகளும், எண்களும், உடல் உறுப்புக்களும் இந்த மூலகங்களுடன் இணைத்தே விளக்கப்பட்டன. வசந்த காலத்தில் மரங்கள் வளர்ந்து கோடை காலத்தின் மூலகமான நெருப்பை உண்டாக்குகின்றன. நெருப்பின் சாம்பல் மணணுக்குள் புதைந்து, இலையுதிர் பருவத்தில் கிணறு தோண்டுவதற்குத் தேவையான உலோகமாக மாறுகிறது. கிணறுகளில் இருந்து குளிர் பருவத்தின் மூலகமான தண்ணீர் கிடைக்கிறது.



Thanks to http://angelinmery.weebly.com/yoga.html
https://suzhimunai.wordpress.com/

சுக்லாம்பரதரம் விஷ்ணும்...

சுக்லாம்பரதரம் விஷ்ணும்...

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

suklaambharadharam vishnum sasivarnam chathurpujam
prasannavathanam dhyAyEth sarva viknObha saanthayE


கொஞ்சமேனும் இறை நம்பிக்கை உடையவர்களில் பெரும்பாலோனோருக்கு இந்த சுலோகம் தெரிந்திருக்கும். குறைந்தது கேட்டாவது இருப்பார்கள். வடமொழியில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இந்த சுலோகத்தைச் சொல்லியே தொடங்குகின்றன. பொதுவாக இந்தச் சுலோகம் விநாயகரை வணங்கும் சுலோகமாகக் கருதப்படுகின்றது.


சுக்லாம் பரதரம் என்று இந்த சுலோகத்தின் தொடக்கத்தில் இருக்கும் சொற்றொடரை இரு சொற்களாகப் பிரித்து உச்சரிப்பது பொருளினை உணர்வதற்குத் தடையாக அமைகிறதோ என்றொரு எண்ணம் உண்டு. சுக்ல அம்பர தரம் என்ற மூன்று சொற்களின் கூட்டுச் சொல் சுக்லாம்பரதரம் என்பது. சுக்லாம் என்பதற்கும் பரதரம் என்பதற்கும் இடையில் இடைவெளி விடாமல் பலுக்கினால் (உச்சரித்தால்) பொருள் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
இந்த சுலோகம் விஷ்ணுவிற்கான சுலோகம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. விஷ்ணும் என்றும் ப்ரசன்ன வதனம் என்றும் இருப்பதால் யானை முகனான கணேசனுக்கு உரிய சுலோகம் இல்லை இது என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால் இந்த சுலோகத்தில் எப்படி கணேசனுக்குப் பொருந்தாது என்று தோன்றுகிறதோ அதே போல் விஷ்ணுவிற்கும் பொருந்தாதது என்று சொல்லத் தக்க சில சொற்களும் இருக்கின்றன. இங்கே இந்த சுலோகத்திற்கு இரண்டு வகையிலும் பொருள் தருகிறேன். எது பொருத்தம் என்று தோன்றுகிறதோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

விநாயகர்:

சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

விஷ்ணு:

சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் பெருமாள் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர் (பெரும்பாலும் நீல நிறம் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் வ்யூஹ அவதாரங்களில் ஒரு உருவம் சந்திர நிறம் கொண்டவர்)
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

http://ganesapandian.blogspot.in/

திருவிளக்கு வழிபாடும் பூஜா விபரமும் !!

திருவிளக்கு வழிபாடும் பூஜா விபரமும் !!



தினம் வீட்டில் காலையும் மாலையும் தீபம் ஏற்றி வணங்கி வர திருமகள் நிலையாக வீட்டில் தங்கிவிடுவாள். இந்த தீபத்தை எப்படி வழிபடுவது, எந்த வகை திரி, எண்ணெய், எந்த உலோகத்தினால் செய்த விளக்கு உபயோகப்படுத்துவது என நடுத்தர குடும்பத்து இல்லதரசிகள் குழம்புகின்றனர். அவர்களுக்காகவே பெரியோர்கள் வழி வகுத்து சொன்ன தகவல்களை இங்கு தெரியப்படுத்துகின்றோம்.

திருவிளக்கின் வகைகள் : மண்ணால் செய்த விளக்கு, வெண்கலத்தால் செய்த விளக்கு, பஞ்சலோகத்தால் செய்த விளக்கு, வெள்ளிவிளக்கு, இவ்விளக்குகளில் தீபம் ஏற்றலாம். எவர்சில்வர் விளக்கு சனிக்கிழமை மட்டும் தோஷ சாந்தி செய்பவர்கள் ஏற்றலாம். இந்த உலோக விளக்குகளில் காமாட்சி அம்மன் திருவுருவம் அல்லது அஷ;டலட்சுமிகள் திருவுருவம் பொறிக்கப்பட்டு இருப்பின் உத்தமம். குத்துவிளக்கிலும் தீபம் ஏற்றலாம்.
எண்ணெய் வகைகள் :
நெய் : நெய் தீபம் ஏற்றுவது மகாலட்சுமிக்கு ப்ரிதி செல்வம் சேரும்.
எள் எண்ணெய் : தரித்திரத்தை போக்கும் மரண சனி பொங்கு சனியாக மாறி வளம் தருவார்.
தேங்காய் எண்ணெய் : கேது பகவானுக்கு ப்ரிதி, கேது தோஷம், கேது தசை நடப்பவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயில் தீபம் ஏற்றி வரலாம்.
விளக்கெண்ணெய் : (கொட்டமுத்து) அம்மனுக்கு உகந்தது தைரியத்துடன், செல்வமும் சேரும், உறவுகள் பலபடும், புகழ் உண்டாகும்.
இலுப்பை எண்ணெய் : குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் இந்;த எண்ணெயில் தீபம் ஏற்ற குலம் செழிக்கும்.
கடலை எண்ணெய்யை ஒரு போதும் தீபத்திற்கு உபயோகப்படுத்த கூடாது.
திரிவகைகள்
பஞ்சு திரி : சுத்தமான பஞ்சினை பன்னீரில் நனைத்து நிழலில் உலர்த்தி போடலாம் அல்லது அப்படியே போடலாம்.
வாழைத்தண்டு திரி : குலதெய்வ சாபத்தினை போக்க வல்லது.
சிவப்பு நூல் திரி : வீட்டில் சதாபிரச்சனை உள்ளவர்கள், திருமணம் தடை உள்ளவர்கள் இந்த திரியை உபயோகப்படுத்தலாம்.
மஞ்சல் நூல் திரி : அம்மன் அருள் கிடைக்க இந்திரியை உபயோகப்படுத்தலாம்.
வெள்ளை வஸ்திர திரி : வெள்ளை வஸ்திரத்தை பன்னீரில் நனைத்து திரியாக திரித்து போடலாம். தெய்வ குற்றத்தை போக்கும்.
வெள்ளை எருக்கன் திரி : வீட்டில் துஷ;ட ஆவிகள் இருப்பினும், அடிக்கடி சாமிவந்து ஆடுபவர்கள் இந்த திரியினால் தீபம் ஏற்றி வர மங்களம் உண்டாகும்.
தாமரை தண்டு திரி : மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
தீபம் ஏற்றும் முகம்
ஒரு முகம் தீபம் ஏற்ற : ஒரு முகம் தீபம் ஏற்ற மனசஞ்சலம் நீங்கும் வசியம், புகழ் ஏற்படும்.
இருமுகம் தீபம் ஏற்ற : குடும்ப ஒற்றுமை ஏற்படும், வாக்கு வன்மை ஏற்படும்.
மூன்றுமுகம் தீபம் ஏற்ற : ஊழ்வினை தோஷம் போக்கும், புத்திரர்களால் மேன்மை கிடைக்கும்.
நான்குமுகம் தீபம் ஏற்ற : வீடு, வாகனம் அமையும், விவசாயிகளுக்கு கால்நடை விருத்தியடையும்.
ஐந்துமுகம் தீபம் ஏற்ற : அனைத்து செல்வங்களும் கிடைக்கும், புத்;திர சோகம் நீங்கும்.
தீபத்தை ஏற்றும் திசை : தெற்குத் திசை தவிர்த்து மற்ற அனைத்து திசைகளிலும் தீப முகம் இருக்கலாம்.
தீபத்தை வைக்கும் இடம் : தீபத்தை தரையில் வைக்ககூடாது. ஒரு பித்தளை தட்டு (அ) காப்பர் தட்டு (அ) பஞ்சலோக தட்டை எடுத்துக் கொண்டு அதில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள், கிழங்கு வைத்து அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கினை வைக்கவும். அல்லது மஞ்சள் நீரில் விளக்கினை வைக்கலாம். குத்து விளக்கை ஒரு சிறிய வாழை இலை வைத்து அதில் அரிசி வைத்து அதன் மேல் வைக்க வேண்டும்.

குத்துவிளக்குக்கு மட்டும் அடிப்பாகம், தண்டுபாகம், எண்ணெய் பாகம், திரிமுனைகள் முகம், விளக்கின் மேல் நுனி இவற்றில் மஞ்சள் வைக்கவும். ஏனெனில் குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்மனையும், தண்டுபாகம் திருமாலையும், எண்ணெய் பாகம் ருத்திரனையும், முகங்கள் ஈஸ்வரனையும், மேல் நுனி பிரம்மத்தையும் குறிக்கும்.
https://suzhimunai.wordpress.com/

சாபனை விபரங்கள்

சாபனை விபரங்கள்

ஒருவர் பலவித சூழ்நிலையில் வம்சா வழியாக துன்பப்பட்டுக் கொண்டு இருப்பின் அவர் பிரேதசாபம், தேவதோஷம், ஸர்ப்பதோஷம், பித்ருதோஷம், அபிஷhர தோஷம், திருஷ;டி தோஷம் போன்ற சாபனைகளில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவரும், இதை அவரது ஜனன ஜாதக கிரஹ நிலை கொண்டு கண்டிப்பாக அறியலாம்.


1. பிரேத சாபம் : பிரேத சாபனை என்பது ஒருவரது குடும்பத்தில் இறப்பு நேரும் போது இறப்பு நடந்த இடத்தை சுற்றி சுமார் 88 அடி தீட்டு ஏற்படுகின்றது. இதை சிலர் பொருட்படுத்தாமல் உணவு அருந்துதல், பூஜை செய்தல், தாம்பத்ய தொடர்பு கொள்ளுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் உண்டாவதாகும். மேலும் பிணத்தை வைத்துக் கொண்டு முறை செய்வதற்காக சண்டை போட்டுக்கொள்வது, பாகம் பிரிப்பது கடன் கொடுத்தோர் கடனை திருப்பி செலுத்த சொல்லுதல் இதன் மூலமும் இந்த சாபனை தொடரும்.
விளைவு : தீராத நோய்கள் ஏற்படும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், மனதில் நிம்மதியே இருக்காது, எந்த வித காரியத்தையும் சுலபமாக முடிக்க முடியாது, மணவாழ்க்கையில் வெறுப்பு, பிரிவு ஏற்படும் புத்திரசோகம் கொடுக்கும், தேவையற்ற பொருள்நஷ;டம் கொடுக்கும், புத்தி ஒரு சமயம் போல் மறுசமயம் இருக்காது.


2. தேவதோஷம் : தேவதோஷம் என்பது வீட்டில் பரம்பரை பரம்பரையாக பூஜை படங்கள் அல்லது எந்திரங்கள் அல்லது விக்கிரஹங்கள் இவற்றை பூஜித்து விட்டு பிறகு இவைகளை பூஜை செய்யாமல் அலட்சியப்படுத்துவதால் வருவது.


விளைவு : எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்காது, செலவு, உற்றார் உறவினர் மூலம் செலவு, வம்பு, வழக்கு, பிரயாணத்தால் செலவு, மருத்துவத்தால் செலவு, உறவுகள் பகையாக மாறும், பக்கத்து வீட்டுக்காரரால் சதா பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். தாம்பத்தியத்தில் வெறுப்பு ஏற்படும்.


3. ஸர்ப்பதோஷம், நாகதோஷம் (பெண் சாபனை) : ஸர்ப்பதோஷம் என்பது பெண்களுக்கு இழைத்த அநீதியால் வருவது.


கன்னிப்பெண்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை மணப்பது. நண்பனது மனைவியை நிர்பந்தத்தால் பாழ் செய்வது. அதிகாரத்தால் பெண்ணை பணிய வைப்பது. மணமான பெண், விதவைபெண், வாழாமல் வீட்டில் இருக்கும் பெண் இந்த பெண்களிடம் நன்றாக வாழவைப்பேன் என்று உறுதி கூறி சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு நடுவீதியில் விட்டு விட்டு ஓடி விடுவது. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை துவம்சம் செய்வது. சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்பி விடும் பெண்ணை மோசம் செய்வது. ஒன்றும் அறியாத சிறுமிகளை கெடுப்பது. முதல் மனைவி மனது நோக இரண்டாவது மனைவியை கொண்டு வருவது.


விளைவு : மனைவி கள்ள தொடர்பு வைத்து பல வித அவமானத்துக்கு உள்ளாக்குவாள். மனைவியிடத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை ஏற்படும் வீட்டில் நுழையவே பிடிக்காது. பெண் குழந்தைகள் தன் இஷ;டத்திற்கு நடந்து அவமானத்துக்கு உள்ளாக்குவார்கள். தாய், சதோதரியிடத்தில் மனவேற்றுமை உண்டாகி கொண்டே இருக்கும். கணவன் மனைவியிடத்து அன்யோன்யம் இருக்காது அதே சமயத்தில் பிளவும்; இருக்காது. மணவாழ்க்கையால் சொந்தத்தில் மதிப்பும், மரியாதையும் குறையும், கணவன் மனைவிக்கு அடிக்கடி உடல் பாதிப்பு இருக்கும். தொழில் விஷயமாக கணவன் மனைவிக்கிடையே அபிப்ராய பேதங்கள் உருவாகும், தொழில் நிமித்தமாக கணவன் மனைவி பிரிவு ஏற்படும். தன் மனைவி, சுகத்துக்கு தானே வேறு ஆள் கொண்டு வரும் நிலை ஏற்படும். அண்ணன் மனைவி, தம்பி மனைவி, மாமியார் மருமகன், மருமகள் மாமனார் தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் மனைவியிடத்தில் அனுதினமும் கோபம் தாபம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.


4. பித்ரு தோஷம் : பித்ரு தோஷம் என்பது வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காமல் விடுவது.
நன்றாக வளர்த்து எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்து வாழ வைத்த பெற்றோர்களை வயதான காலத்தில் தவிக்க விடுவது, அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பது, தனக்கென்று உயர்தர உணவும் பெற்றோர்களுக்கு என்று தரம்; குறைந்த உணவும் கொடுத்து ஹிம்சைக்கு உள்ளாக்குவது, பெரியோர்களை அலட்சியப்படுத்தி பணியாட்களாக கருதுவது, தனது பெற்றோர்களை பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவது, இயற்கை பாதிப்பில் இருந்து பெற்றவர்களை காப்பாற்றாமல் விடுவது, இறந்த பெற்றோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பது, அவர்களது உடமைகளை அலட்சியப்படுத்தி விற்பது, கொடுமை தாங்காமல் பெரியோர்கள் தற்கொலை செய்து கொள்வது இந்த செயல்கள் பித்ருதோஷத்தை கொடுக்கும்.


விளைவு : அடிக்கடி புத்தி மாறாட்டம் ஏற்படும், தன் இனத்தை விட்டு வேறு இனத்தில் பிறர் வெறுக்கும்படி திருமணம் நடக்கும், தான் பெற்ற பிள்ளைகளுக்கு பெரியோர்களது ஆதரவு கிடைக்காது, அடிக்கடி பெரியோரிடத்து திட்டு வாங்கிகொண்டே இருக்கும், ஒரு சமயம் நன்றாக பேசும், மறுமுறை பேசாது, தானே பேசும் சிரிக்கும், தலையை நமிர்த்திக் கொண்டே நடக்கும், கர்வம் பிடிக்கும், தேவையில்லாமல் பொருள் நஷ;டம் புத்திரசோகம் ஏற்படும், தலையில் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும் மூளை பகுதி சூடாக இருக்கும், டென்சன் வாழ்க்கை ஏற்படும், மனதை போட்டு குழப்பிக் கொண்டே வாழ வேண்டி வரும்.


5. அபிஷhர தோஷம் : அபிஷhர தோஷம் என்பது செய்வினை தோஷம் ஆகும். மாந்திரிகத்தை பயன்படுத்தி தனக்கு பிடிக்காதவர்களை அழிவுக்கு கொண்டு செல்வது. தேவதைகளை அடிமைப்படுத்தி ஏவல் விடுவது. செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் 12 வருடகாலம் பாதிக்கப்படுவர், யார் செய்தார்களோ அவர்கள் 98 வருடகால் பாதிக்கப்படுவர், இவர்களது வம்சா வழியும் முன்னேற்றம் அடையாது. ஆக யாரும் செய்வினை தோஷத்தில் ஈடுபடாமல் இருப்பதே உத்தமம். பலர் கஷ;டப்படும் போது செய்வினை செய்துவிட்டார்களோ என்று அச்சப்படுவர் இது தேவையற்ற அச்சமே, செய்வினை ஏவலை வெகு சுலபமாக செய்துவிட முடியாது, ஊர் தெய்வ உத்திரவு, குல தெய்வ உத்திரவு, ஜாதகத்தில் இருக்கும் கிரஹ நிலைகள் இவற்றை அறிந்து தான் செய்வினை ஏவலில் ஈடுபடமுடியும்.


விளைவு : செய்து வைத்த உணவு நிறம் மாறும், உணவில் மனித உறுப்பு கிடக்கும், உணவில் துர்நாற்றம் கிளம்பும், பசு மாடு இறக்கும், இரவில் கதவு தட்டப்படும், பயங்கரமான உருவம் கனவில் வந்து பயமுறுத்தும், கூரையில் மனிதர் ஓடுவது போல் இருக்கும், கற்கள் வீசப்படும், தீப விளக்கு எரியாது, இனம் புரியாத கொடூர நோய் உருவாகும், சேர்த்து வைத்த செல்வம் பாழாகும், மனநிம்மதி இருக்காது, பிழைக்க வழியின்றி மனம் பேதலிக்கும், தன்னிலை மறப்பார்கள், சிரிப்பார்கள், ஓடுவார்கள்.


6. திருஷ;டி தோஷம்; திருஷ;டி தோஷம்; என்பது தனது ஆசை நிறைவேறாமல் எவர் ஒருவர் இறக்கின்றாரோ அவர் ஆன்மா சாந்தி அடையாமல் தனது உறவினர்களையோ அல்லது அவரது கிரஹ நிலைகள் ஒட்டியவரையோ பற்றிக் கொள்வது


விளைவு : நல்ல ஆசைகளை கொண்டு பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஆவலில் இருப்பவர்கள் திடீரென்று இறக்க நேரிடும் போது ஆன்மா சாந்தி அடையாமல் அந்த ஆசையை உயிருடன் இருக்கும் ஒருவர் மூலம் நிறைவேற்றி கொள்வார்கள். இதன் விளைவாக சிறிய வயதாக இருப்பவர்கள் பெரிய, பெரிய விசயங்களை சொல்வார்கள், எந்த கேள்வி கேட்டாலும் ஏற்கனவே பார்த்தது போல் சொல்வார்கள், நாம் அவர்களை பார்த்து வியப்பில் இருப்போம். இந்த நிலை அந்த சிறுவர்களிடம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் இருக்கும் பிறகு மறைந்து விடும்.



கெட்ட ஆசைகள் உள்ளவர்களின் ஆன்மா சாந்தியடையாமல் மற்றவர்களை பிடித்துக் கொண்டால் பல தொல்லைகளை கொடுத்து விடுவார்கள். இதையே பேய்பிடித்தல் என்று சொல்வார்கள். இந்நிலை உள்ளவர்கள் படும் துன்பம் பெரும் துன்பமாக இருக்கும் தானே சிரித்தல், விழிகளை உருட்டுதல், உயிருடன் விலங்குகளை கடித்து இரத்தத்தை குடித்தல், ஓடுதல், பழையவர்களின் பெயரை சொல்லி கூப்பிட்டு திட்டுதல், அடித்தல் போன்ற வெறியான செயல்களில் ஈடுபடுவார்கள்.
https://suzhimunai.wordpress.com/

கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள்


கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள்- “யோக வேதம் ” புத்தகத்தில் இருந்து

சாதாரண மனிதனாக வாழ்ந்தாலும் சரி, யோகியாக வாழ்ந்தாலும் சரி உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும். யோகத்திற்கும், போகத்திற்கும் உடல் பிரதானமாகும். எனவே உடலை மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானது என்பதை நினைவில் கொள். மனதின் கழிவுகளை யோக சாதனையின் மூலம் நீக்கும் முயற்சியில் ஈடுபடும் யோகிகளுக்கு அந்த சாதனைக்கு ஒத்துழைக்கும்படியான உடலைப் பெறுவதும் அவசியமாகிறது. எனவே உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவதன் மூலமாகத்தான் யோக சாதனையினை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும்.

அவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கி தூய்மையான உடலுடன் யோக சாதனையினை செய்யும் பொருட்டு சில செய்முறைப் பயிற்சிகளை நான் உனக்குக் கூறுகிறேன். இவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கும் முறைக்கு நித்திய சுத்தி என்று பெயர். இதை 5 விதமாகப் பிரிக்கலாம். அவை 1. தந்த சுத்தி 2. கப சுத்தி 3. நேத்திர சுத்தி 4. குடல் சுத்தி 5. உடல் சுத்தி என்பனவாகும். உடலின் கழிவுகள் வெளியேற்றப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெளியேற்றப்படாத கழிவுகள் தங்கும் இடங்களாக வாய், தொண்டையின் மேல்பகுதி, கண், குடல் போன்ற இடங்கள் உள்ளன. இங்கு தங்கும் கழிவுகளே மனித உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்து பல நோய்களை உருவாக்கக் காரணமாக அமைகின்றன என்பதை நினைவில் கொள்.

எனவே இந்தக் கழிவுகளை முறைப்படி நீக்குவது மிகவும் அவசியமாகும். காயம் என்னும் உடலைப் பற்பல அபூர்வ மூலிகைகளாலும், பாஷhண மருந்துகளாலும், மிகவும் உயர்வான பல கற்ப ஒளஷதங்களாலும் அழியாத தூய உடலாக மாற்றும் இந்த நித்திய சுத்தி முறைகள் மிகவும் அவசியமாகும். இவ்வாறு பல ஆண்டுகள் மிகவும் கடுமையான பல கட்டுப்பாடுகளுடன் நித்திய சுத்தி முறைகளையும், ஒளஷத முறைகளையும் கடைப்பிடித்து உடலை சித்தி செய்து கொண்ட பின் இந்த முறைகள் தேவையில்லை. எனவே அந்நிலையை அடைந்த சித்;தபுருஷர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டு இவர்களெல்லாம் தினமும் இந்த முறைகளை கடைப்பிடிப்பதில்லையே என்ற குழப்பம் உன் மனதில் எழக்கூடாது. ஏனெனில் அவர்கள் முழுவதும் தூய்மை அடைந்தவர்கள்.

எனவே அந்நிலையினை நீ அடையும் வரையில் கண்டிப்பாக இந்த நித்திய சுத்தி முறைகளை நீ கடைப்பிடித்தே ஆக வேண்டும். இனி நித்திய சுத்தி முறைகளை நீ கடைப்பிடிக்கும் போது கையாள வேண்டிய பொருள்களைப் பற்றித் தெளிவாகக் கூறுகின்றேன். முதலில் தந்த சுத்தி என்னும் பல்லினைத் தூய்மை செய்யும் முறையையும் அதற்குரிய பொருள்களையும் கூறுகின்றேன். இந்த முறையினை யோகிகள் அல்லாதவர்களும் கடைப்பிடிப்பதால் நலமே கிட்டும்.

தந்த சுத்தி :

வேப்பம்பட்டை, கருவேலம்பட்டை, நாயுருவி வேர் பட்டை, கடுக்காய்த் தோல், கிராம்பு ஆகிய ஐந்து பொருள்களையும் சம அளவாக எடுத்து வந்து நன்கு வெயிலில் உலர்த்தி இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும். இந்த சூரணத்திற்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பைப் பொடி செய்து கலந்து வைக்கவும். இதுவே தந்தாதி சூரணம் எனப்படும். தினமும் அதிகாலையில் இந்தச் சூரணத்தைக் கொண்டு பற்களை நன்கு அழுத்தித் தேய்த்துத் துலக்குவதன் மூலமாக பற்களில் உள்ள கறைகள், கிருமிகள் நீங்கும். பற்களில் வசீகரம் உண்டாகும். முகவசீகரம் ஏற்படும். அத்துடன் பற்களின் மேல் உள்ள ஈறுகள் நன்கு இறுகும்.

தந்த வாய்வு மற்றும் பற்களில் ஏற்படும் இரத்தக்கசிவு முதலியவைகள் நீங்குவதுடன் வாயில் உண்டாகும் வழுவழுப்புத் தன்மையும் மாறும். பயிற்சியின் போது அதிக நேரம் அப்பியாசம் செய்வதால் வாயுவானது கபாலத்தை நோக்கி வரும்போது தந்தங்களின் மேலுள்ள ஈறுகளின் உட்புறத்தில் தங்க நேரிடும். அவ்வாறு நடக்கும்போது ஈறுகளில் வீக்கமும் உண்டாகும். இரத்தக்கசிவு கூட உண்டாகும். இதனால் ஈறுகள் விரைவில் கடினத்தன்மையை இழந்து பற்கள் உதிரும். எனவே தந்த சுத்தியானது மிகவும் முக்கியமானதாகும். இனி அடுத்ததாக மிகவும் எளிமையான அதே சமயம் மிகவும் அரிய பலனைக் கொடுக்கும் நேத்திரசுத்தி என்னும் கண்களின் கழிவுகளையும், கண்களின் அழற்சியையும் நீக்கும் அற்புத முறையைக் கூறுகின்றேன். இதை பயிற்சி செய்யும்போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

நேத்திர சுத்தி:

முகம் முழுவதும் மூழ்கும் அளவிலான ஒரு மண்பாண்டத்தை வாய் அகன்றதாக எடுத்துக் கொள். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அந்தப் பாண்டம் முழுவதும் நல்ல சுத்தமான நீரை ஊற்றி மூடி வைத்துவிடு. குhலையில் எழுந்த தந்நத சுத்தி செய்வதற்கு முன்பாக அந்த நீரில் 5 பன்னீர்ப்பூக்கள் அல்லது 5 நந்தியாவட்டம் பூக்களைப் போட்டு வைக்க வேண்டும். தந்த சுத்தி செய்து முடித்தபின்பு அந்த மண்பாண்டத்தில் உள்ள குளிர்ந்த நீhலி முகத்தை நன்கு அமிழ்த்திக் கொண்டு கண்களை நன்கு விரியத் திறந்து கண்விழியினை வலமிருந்து இடமாக 5 முறையும், இடமிருந்து வலமாக 5 முறையும் சுழற்றி பின் 5 முறை இமைகளை மூடி மூடித் திறந்தும் அதன்பின் சற்றுநேரம் கண்களை அசைக்காமல் திறந்தபடியும் வைத்திருக்க வேண்டும். இவ்;வாறு செய்யும்போது சுவாசத்தை நிறுத்த முடியவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் முகத்தை வெளியில் எடுத்தும் செய்யலாம். செய்வதற்கு எளிதாகத் தோன்றினாலும் இது மிகவும் அரிய பயிற்சியாகும். இவ்வாறு செய்வதால் கண்களில் உண்டாகும் அழுக்குகள், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களின் அழற்சி முதலியவை நீங்கி கண்களின் உட்புறம் உள்ள மிகவும் நுண்ணிய நரம்புகள் குளிர்ச்சியடைந்து கண்கள் மிகவும் பிரகாசமடைவதுடன் குளிர்ந்து காணப்படும்.

இதைச் செய்வதால் தீவிரமாக அப்பியாசம் செய்யும் போது கண்களில் ஏற்படும் அதிக எரிச்சல், இமைகள் துடித்தல், கண் இமை ஓரங்களில் ஏற்படும் அதிக வலி ஆகிய உபாதைகள் நீங்கும். மேலும் அன்றாடம் கண்களில் ஏற்படும் கழிவுகள் அகற்றப்படுவதால் கண் மறைவு நீங்கும். இந்த முறையில் பன்னீர் மற்றும் நந்தியாவட்டம் பூக்கள் கிடைக்காவிட்டால் வெறும் தூய்மையான நீரை மட்டும் பயன்படுத்தலாம். இந்த நித்திய சுத்தி முறையில் கூறப்படும் நேத்திர சுத்தி முறையினை சாதாரணமாக சம்சார வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களும், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யோக சாதனையை மேற்கொள்பவர்கள் கண்டிப்பான முறையில் இதைச் செய்தாக வேண்டும். கிரியா எனும் யோக விஞ்ஞானத்தின் பயிற்சிகளை மேற்கொள்ளும் நீ இந்த நித்திய சுத்தி முறைகளை தெளிவாக அறிந்து பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எவ்வித மறைப்பும் இன்றி வெளிப்படையாகக் கூறுகிறேன். கவனமுடன் கேட்டு முறையாகக் கடைப்பிடிப்பாயாக.
இனி அடுத்ததாக பல பெரிய யோகிகள் கூட அறிந்திராத அதே சமயம் மிகவும் கட்டாயமாகச் செய்ய வேண்டிய கப சுத்தி முறையானது கூறப்படுகிறது. இந்த முறையினை நம்முடைய முன்னோர்களான கிரியா யோக மஹாகுருமார்கள் அனைவரும் பின்பற்றியது மட்டுமின்றி வலியுறுத்தியும் கூறியுள்ளனர். ஆதை உனக்குக் கூறுகின்றேன்.

கப சுத்தி:

மூலிகை கைகளில் பல இருந்தாலும் யோக நிலைக்கு உதவும் ஈர்ப்பு சக்தியுள்ள மூலிகைகள் இவ்வுலகில் உண்டு. இந்த விதமான மூலிகைகளில் தாதுக்களின் தன்மை அதிகமாக இருப்பதுடன் ஐம்பூத அணுவின் ஆற்றலும் அதிக அளவில் இருக்கும். அவ்வாறான மூலிகைகளையே காயகற்ப மூலிகைகள் என்று கூறுவர். இவ்வாறான காயகற்ப மூலிகைகளுள் முதன்மையான இடத்தைப் பெறுவது கரிசலாங்கண்ணி என்னும் தெய்வீக மூலிகையாகும். இந்த மூலிகையைப் பயன்படுத்தாத யோகிகளே இல்;லை என்று கூறலாம். அவ்வளவு அரிய மூலிகையான கரிசலாங்கண்ணி மூலிகையே கிரியா யோக அப்பியாசத்தின் போது தைல முறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கூறப்படும் கப சுத்தி முறைக்கும் இந்த மூலிகையே பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணி மூலிகையை வேண்டிய அளவு பிடுங்கி வந்து நன்கு தண்ணீரில் கழுவி உரலில் போட்டு இடித்து சாறுபிழிந்து வைத்துக்கொள். அந்தச் சாற்றின் அளவிற்கு சமஅளவு சுத்தமான பசு நெய்யினை எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு அடி கனத்த சட்டியில் ஊற்றி அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் பதமாகக் காய்ச்சவும். நன்கு காய்ந்து நெய் சிவந்து புகையும் நிலையில் படிகாரம் என்னும் சீனிக்காரத்தைப் பொடி செய்து சிறிதணவு அதில்போட்டு சற்றுநேரம் கொதிக்கவிட்டு பின்பு இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்தப் பாண்டத்தின் வாய்க்கு துணியால் வேடுகட்டி வைத்துக் கொள்ளவும். இது அமிர்தத்திற்கு ஒப்பானதாகும்.

தினமும் காலையில் தந்த சுத்தியை முடித்த பின்பு இந்த கரிசாலை நெய்யை வலதுகைப் பெருவிரலில் தொட்டு வாயினுள் உள்நாக்கின் பின்புறமுள்ள மேல்நோக்கி சுவாசமானது செல்லும் துவாரத்தின் வாயில் நன்கு தடவி விடவும். பின்பு யாரிடமும் பேசாமல் எதுவும் உண்ணாமல் (48 நிமிடங்கள்) இரண்டு நாழிகை நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து இருக்கவும். இவ்வாறு நெய்யினை மூன்று முறை நெய்யினைத் தடவிக் கொண்டு இரண்டு நாழிகை இருக்கும்போது மனிதனின் சுவாசத்தை தடை செய்து மரணத்தை ஏற்படுத்தும் கபம் என்னும் கோழை என்றும் கூறப்படும் ஊர்த்துவ நாடி எனும் மேல் முகமான மிக மெல்லிய, நுண்ணிய ஜீவனாகிய உயிர் எனும் ஜீவ அணுவின் சுழற்சிக்கு சுவாசமானது செல்லும் பாதையில் அடைத்துக் கொண்டிருக்கும் கோழையானது இந்த மூலிகை நெய்யின் ஆற்றலால் மிக மெதுவாகக் கரைந்து கரைந்து வாய்க்குள் வர ஆரம்பிக்கும். இதை வெளியில் துப்பிவிட வேண்டும். இந்தக் கோழையானது நச்சுத் தன்மை உடையது.

மனிதன் பிறக்கும்போது உருவான இந்தக் கபமானது இறக்கும் வரையில் தானாக வருவதில்லை அதனால் தான் நாசியின் மேல்புறம் வழியாக நெற்றியின் உட்புறத்தில் உள்ள சுவாச நரம்புகளின் வழியாக சுவாசமானது பிரிந்து ஜீவ அணுவிற்கு சுற்றிக் கொண்டு செல்கிறது. இவ்வாறின்றி சுவாசமானது ஒரே நேர்க்கோட்டில் உடம்பின் மையப்பகுதியில் மேல்நோக்கி இயங்க வேண்டும். இதற்காக சுவாசத்தை இயற்கைக்கு மாறாக மேல்நோக்கி செலுத்தக் கூடாது. அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிய வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும். அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிக வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும். அவ்வாறு வருவதை சிலர் அமிர்தம் என்று கூறிக்கொண்டு உட்கொண்டு விடுவார்கள்.
மனித உடலின் கழிவாகிய கபம் என்னும் கோழையானது எங்காவது அமிர்தமாகுமோ? இவ்வாறு வாசியோகம்; என்னும் பயற்சியைச் செய்யும் சில யோகிகள் தெரியாமல் கோழையை உட்கொள்வதால் உடலில் பல நோய்கள் ஏற்படுவதுடன் வாய்நாற்றம், வயிற்றுவலி போன்ற நோய்களும் உண்டாகும். எனவே இந்த உண்மையான கபசுத்தி முறையினை முறையாக தவறின்றி தினமும் பயிற்சி காலத்தில் நீ கடைப்பிடித்து வரும்போது ஊர்த்துவ நாடியானது சிறிது சிறிதாக அடைப்பு நீங்கி சுத்தமாகும். இவ்வாறு சுத்தமாவதால் சுவாசமானது தானாக மேல்நோக்கும். இதனால் ஜீவ அணுவின் சுழற்சி அதிகமாகி வான் அமிர்தம் எனும் அணுமின் காந்த ஜீவ சக்தியை அதிகமாக உள் ஈர்க்கும். இதுவே உண்மையான வாசியோகமாகும். எனவே இந்த கபசுத்தி முறையினைத் தவறாமல் தினமும் செய்வாயாக.

குடல் சுத்தி:

யோகப் பயிற்சியாயினும் சரி, சாதாரண வாழ்க்கை யாயினும் சரி வயிறு சுத்தமாக இருப்பது அவசியம். வயிற்றில் உள்ள சீரண மண்டலங்களான குடல்களை சுத்தம் செய்யும் முறைக்கு குடல்சுத்தி என்றுபெயர், இது மிகவும் அவசியமானதாகும். குடல் சுத்தமாகி அன்றாடம் உள்ள கழிவுகளை நீக்குவதன் மூலமாக யோக சாதனை சித்தியானது மட்டுமல்லாமல் பல நோய்களும் நீங்கும். இவ்வாறான குடல் சுத்தி முறையினைக் கூறுகின்றேன். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக சுத்தமான தண்ணீர் 2 படி எடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் இறக்கி வைத்து அதில் சிறிதளவு சீரகத்தைப் போட்டு நன்கு மூடி வைத்துவிட வேண்டும்.

அதிகாலையில் எழுந்து மூடியைத் திறந்து பார்க்க அந்தத் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த நீரை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். காலையில் தந்த சுத்தி செய்தவுடன் இந்த நீரை சிறிது சிறிதாக உட்கொண்டு வயிற்றை எக்கி மறுபடியும் விட்டு உள்புறம் எக்கி மறுபடியும் விடவும். இவ்வாறு 8 முறை செய், இவ்வாறு செய்வதால் வயிற்றிலுள்ள மலங்கள் அலசப்பட்டு மலம் கழிக்கும் உணர்வு உண்டாகும். மலம் கழித்துவிட்டு வந்து மறுபடியும் தண்ணீர் அருந்திவிட்டு இவ்வாறு செய். மறுபடியும் உள்ளே தங்கியுள்ள மலங்கள் வெளியேறும். இவ்;வாறு 4 அல்லது 5 முறைகள் செய்யவும். ஆரம்பத்தில் சற்றுக் கடினமாகவும் சலிப்பாகவும் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக வியத்தகு மாற்றங்கள் உண்டாகும்.
இதனால் பசியின்மை, வயிற்றுவலி, மலச்சிக்கல், அதனால் உருவாகும் தலைவலி, தோல் நோய்கள், யோக சாதனையால் வயிற்றில் உண்டாகும் அதி உஷ;ணம், எரிச்சல், வயிற்றில் வாயு சுழற்சியால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். உடல் பளபளப்பும் குளிர்ச்சியும் உண்டாகும். மிகவும் அபூர்வமான இந்த முறையினைப் பின்பற்றும் சாதாரணமாக யோக சாதனைகள் செய்யாத மனிதன் கூட 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வான். இந்த முறையினை முறையாகச் செய்யாமல் சிலர் காலையில் எழுந்தவுடன் கொதிக்க வைக்காத நீரை அருந்துவார்கள். சிலர் அன்னக்கஞ்சியை மோர் சேர்த்து உட்கொள்வார்கள். இதனால் உடலில் உஷ;ணம் குறைந்தாலும் உடலில் கபமானது அதிகரிக்கும்.

இதனால் தலையில் நீரேற்றம், தலைக்கனம், அதிக வியர்வை, சீதளநோய்கள், மூட்டுவலி, பசிமந்தம் ஆகிய நோய்கள் உண்டாகும். எனவே நான் மேலே கூறியுள்ள முறைப்படி செய்வதுதான் உண்மையான குடல் சுத்தி முறையாகும். தந்த சுத்தி செய்தவுடன் நேத்திர சுத்தி செய்து பின்பு குடல் சுத்தி செய். அதன்பின்பு கப சுத்தி செய்வது நன்று. ஏனெனில் மல உபாதைகள் இல்லாமல் இருக்கலாம். எனவே குடல் சுத்தி முறையினை கிரியா யோக சாதனை செய்பவர்கள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு முறையாகச் செய். ஏனெனில் யோக சாதனையை மட்டும் போதித்து விட்டு அதற்கு ஏற்ப உடலின் தன்மைகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வழியினைக் கூறாமல், கூறத்தெரியாமல் பலர் விட்டுவிடுவதால் தான் அதை அப்பியாசம் செய்பவர்கள் எவ்வளவுதான் கடினமாகவும், விடாமலும் பயிற்சி செய்தாலும் உயர்நிலையினை அடையாமல் அடைய முடியாமல் ஏமாந்து விடுகிறார்கள்.
மேலும் பயிற்சியின் விளைவால் உடலில் ஏற்படும் அதிக உஷ;ணம், வாயுவின் சுழற்சி ஆகியவைகளைத் தாங்க முடியாமல் அவர்கள் பல உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள். எனவேதான் நான் உனக்கு நித்திய சுத்தி முறைகளைத் தெளிவாகக் கூறினேன். இனி உடல் சுத்தி முறையைக் கூறுகின்றேன். உடலில் உள்ள கழிவுகள் ஒவ்வொரு உரோமக் கால்கள் வழியாகவும் வெளியேறும். அவ்வாறு வெளியேறும் கழிவுகளை அன்றாடம் தூய்மையாக நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இவ்விடத்தில் உன் மனதில் ஒரு சந்தேகம் எழலாம். பல பெரும் யோகிகள் பல ஆண்டுகள் குளிக்காமல் இருக்கிறார்களே என்று, உண்மைதான், அவர்கள் தங்கள் உடலை வெகுகாலங்;கள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு காயசித்தி செய்து கொண்டவர்களாவார்கள்.
ஆவ்வாறு காயசித்தி பெறுவதற்காக பல உயர்வான தெய்வீக சக்தியுள்ள மூலிகைகளையும், பாஷhணங்களையும், உலோகங்களையும் இன்னும் உயர்வான பல தாதுப் பொருட்களை யெல்லாம் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி மிகவும் அபூர்வமான கல்ப ஒளஷதங்களைச் செய்து அதை மிகவும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து உட்கொண்டு உடலளவில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து உடலை சித்தி செய்து கொண்டவர்கள் ஆவார்கள்.
இவ்வாறான காயசித்தி முறையின் அபூர்வமான ஆற்றலால் தான் அவ்வாறான மாபெரும் யோகிகளின் மலம், சிறுநீர், வியர்வை, எச்சில், உடல் அழுக்குகள் போன்றவைகள் கூட அவர்கள் உட்கொண்ட பல அரிய கல்ப ஒளஷதங்களின் சக்தியைப் பெற்றுள்ளதால் அவைகள் பட்ட உலோகங்கள் எல்லாம் களிம்புகள் நீங்கி அவர்களின் உடலைப் போலவே தங்கமாகவே மாறுகின்றன. இவ்வாறான நிலையை அடைந்த யோகிகளைத் தவிர ஆரம்ப நிலையில் காயசித்தியினைக் கடைப்பிடிக்கும் முன்பாக அடிப்படையான யோக சாதனைகளைச் செய்துவரும் யோகியானவர் கண்டிப்பான முறையில் கீழ்க்காணும் முறைப்படி யோகியருக்கு உண்டான உடல் சுத்தியினைச் செய்தாக வேண்டும். இனி மிகவும் அருமையான உடல் சுத்தி முறையினைக் கூறுகின்றேன்.
உடல் சுத்தி:
உடல் சித்தி முறைக்குத் தேவையான பொருள்களைக் கூறுகின்றேன். பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வங்காளப் பச்சை, வசம்பு ஆகிய 4 பொருள்களையும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும். இந்த நான்கு பொருள்களின் மொத்த எடைக்கு 10 பங்கு குட்டி விளா இலையையும் அதே அளவு சீயக்காய் காயையும் எடுத்துக் கொள்ளவும். இந்தப் பொருள்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தவும். பின்பு நன்கு இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும் (மிஷpனிலும் அரைக்கலாம்). காலையில் எழுந்தவுடன் இந்த சூரணத்தில் சிறிதளவு எடு;த்து ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும். தந்த சுத்தி, நேத்திர சுத்தி, குடல் சுத்தி, கப சுத்தி ஆகிய நான்கையும் முடித்தவுடன் இளம் சுடுநீரில் இந்தப் பொடியைத் தேய்த்துக் குளிக்கவும். இதனால் உன் உடலின் மயிர்க்கால்களில் தங்கியுள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம், கற்றாழை நாற்றம், உடல் இடுக்குகளின் உப்புப் படிதல், தோலின் வறட்சி, தோல் நோய்கள் நீக்குவதுடன் தோல் பளபளப்போடு வாசனையும் இருக்கும்.

இவ்வாறு முறையாக நித்ய சுத்தியை ஒரு யோகியானவர் அவருடைய யோக சாதனை செய்துவரும் காலங்களில் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எவ்விதமான உடல் உபாதைகளும் இன்றி அவருடைய யோக சாதனையானது நடைபெறும். எனவே நீ இந்த நித்திய சுத்தி முறைகளை முறையாகவும், விடாமலும் கடைப்பிடிப்பாயாக. அப்போது தான் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது. இவ்வாறு நித்திய சுத்தி முறைகளை முறையாகச் செய்து வந்தாலும் உன்னுடைய தீவிரமான பயிற்சியின் விளைவாக உதிரமானது விரைவாக ஓடுவதன் காரணமாகவும், உடலின் நீர்த் தன்மையானது வியர்வையாக அதிகம் வெளியேறுவதன் காhரணமாகவும் உடலில் அதிக உஷ;ணம் ஏற்பட்டு உடல் வளர்ச்சியடையவும் ஒவ்வொரு இணைப்புகளிலும் இடுப்புப் பகுதிகளிலும் உள்ள ஜவ்வு மண்டலங்கள் வறட்சியடைந்து வலி ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே இவ்வாறு ஏற்படாமல் இருக்க மாதத்தில் இரண்டு முறை அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை ‘பட்சசுத்தி’ எனும் முறையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதையும் தெளிவாகக் கூறுகிறேன்.

பட்ச சுத்தி:
இந்த பட்ச சுத்தி முறைக்கு உண்டான பொருள்களை முதலில் கூறுகின்றேன். மிளகு, மஞ்சள், நெல்லிவத்தல், கடுக்காய் தோல், வேப்பமுத்து ஆகிய 5 பொருள்களையும் வகைக்கு கால்பலம் எடுத்து சுத்தமான பசும்பால் விட்டு விழுதுபோல் அரைத்து தலையிலும், உடலிலும் நன்கு அழுத்தித் தேய்த்துக் கொண்டு 1 ஜாமம் ஊறிய பின்பு சுடுநீரில் தலை முழுக வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்வதால் உடல் உஷ;ணம், தலைச்சூடு, கண் புகைச்சல், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் வராது, உடல், கண்கள் குளிர்ந்து காணப்படும். இந்த பட்ச சுத்தியால் உடல் உஷ;ணமானது சமனப்படுவதுடன் உடலின் மயிர்க்கால்கள் தங்கியிருக்கும் மெழுகு போன்ற கழிவுகள் நீங்கும். இதற்கு பஞ்ச கல்ப ஸ்நானம் என்று பெயர்.

இவ்வாறு முறைப்படி உடலை தூய்மையாக்கிக் கொண்டு தீவிரமாக யோகசாதனையை செய்யும்போது உன் உடலில் படிப்படியாக பல மாற்றங்களை நீ உணர்வாய், தூக்கம், சோம்பல், உடல்வலி போன்ற உபாதைகள் நீங்கி உடல் வலுவும் ஆண்மை சக்தியும் அதிகரிக்கும். உயிர் தத்துவமாகிய விந்துவின் தன்மை அதிகரிப்பதால் காம உணர்வானது கூடும் அந்த மாய்கையில் சென்றுவிடாமல் கிரியா என்னும் யோக விஞ்ஞானத்தின் அதி அற்புத ஆற்றல்களை நினைவில் கொண்டு பெருவாழ்வு நிலையில் உயர் தத்துவத்தை மனதில் நிறுத்தி செயல்படு. ஏனெனில் எவ்வளவு நூல்களைப் படித்தாலும் நேரடியாக இதுபோன்ற தெளிவான உன் கருவின் வழிமுறைகளை யாரும் கூறமாட்டார்கள். பல தத்துவங்களையும், பல யோக சாதனை முறைகளையும் கூறுவார்களே அன்றி அனுபவ பூர்வமாக படிப்படியாக முன்னேறும் செய்முறைகளை யாரும் கூறமாட்டார்கள்.

கிரியா யோகத்தின் 16 நிலைகள்:

1. பார்வையை நிலைப்படுத்தல்
2. மனதை நிலைப்படுத்தல்
3. சுவாசத்தை நிலைப்படுத்தல்
4. உடல் இயக்கங்களை நிலைப்படுத்தல்
5. பிரபஞ்ச ஆற்றலை உணர்தல்
6. உடலில் அணு, மின், காந்த ஆற்றலை அறிதல்
7. உடலில் அணு, மின், காந்த ஆற்றலை அதிகப்படுத்தல்
8. உடலின் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்தல்
9. பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி நிறுத்தல்
10. உடல்சித்தி எனும் காயசித்தி செய்தல்
11. உயிராகிய ஜீவ அணுவை உடலில் இருந்து பிரித்து அறிதல்
12. அங்கப் பிரவேச சித்தியடைதல்
13. ஆகாயப் பிரவேச சித்தியடைதல்
14. உடல் அணுக்களில் அணு, மின், காந்த சக்தியை உயர்த்தி உடலின் பெண்மைத் தன்மையை நீக்குதல்
15. உடலை ஒளி உடலாக மாற்றி தூய உடலாக்குதல்
16. பிரபஞ்ச சக்தியுடன் இரண்டறக் கலந்து அனைத்தையும் அறிந்து கொண்டு சமாதி நிலையில் இருத்தல். இதுவே சாயுச்ய நிலையாகும்
https://suzhimunai.wordpress.com/

ஹோம மந்திரங்களும், ஹோமத்தின் பலன்களும் …



ஹோம மந்திரங்களும், ஹோமத்தின் பலன்களும் …



1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.

2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.

3. சிவ அஷ்டாக்ஷரீ – ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.

4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.

5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.

7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.

8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.

9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.

10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.

11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.

12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.

13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.

14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.

15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ – கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.

17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.

18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.

19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.

20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.

22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.

23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.

24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.

25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.

27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.

28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.

29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.

30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.

32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.

33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.

34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.

35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.

37. மஹா கருட மந்த்ரம் – அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.

38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.

39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.

40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.

42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.

43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.

44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.

45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற


46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.

47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.
ஹரிஹர மந்த்ரம்
” ஓம் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய ”
( இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

https://suzhimunai.wordpress.com/

மூன்றாவது கண் !!!



மூன்றாவது கண் !!!

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும் புருவங்களின் இடைநடுவே சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவு மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக்கண்” என்று பெயர். இதை மிக இலேசான சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர்த் துவாரத்திற்கும் மலத் துவாரத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊறும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகந்தண்டு எலும்புக்குள் உள்ள மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப் பின்புறத்திலிருந்து நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள் விவேகத்திறமையாலும், குண்டலினியை எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண் திறக்கப்படுகிறது.

குண்டலினி சக்தியின் பிரதிபலிப்பு நம் தோற்றத்தில் பார்ப்பதென்றால், கண்ணுக்கு நேரே நான்கடி தூரத்தில் ஒரு நாக்கு பூச்சி அளவில் சிறு வளைவுகளும் சிறு கால்களைப் போன்ற கிளைகளும் 3 1/2 முதல் 4 அங்குல நீளத்தில் ஒன்று அல்லது இரண்டு தெரியவரும். இதில் சில பிரகாச அணுக்கள் கசகசா அளவில் இணைந்திருப்பதையும் பார்க்கலாம். இவை ஒரே நிலையாய் நிலைத்து நிற்கா, மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். தோன்றுவதும், பின் மறைவதும் இதன் தொழில். பக்தர்கள் யாவரும் இதைப்பார்க்கலாம்.

நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு அறிந்த ஞானாசி¡¢யரோடு இருபது வயதிற்குமேல் அறிவோடு விந்தும், தன் ஞாபகமும் கலந்தால் தான் முடிகிறது. இந்தக் கண் திறந்திருந்தால் அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை வாசி (பிரணாயாமம்) என்ற மூச்சுப் பயிற்சியாலும் மற்ற யோகங்களாலும் திறக்க முடியாது. நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின் அறிவுப்பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக் கண்ணால் பல விஷயங்களை உணரமுடியும். பின் அதை, அனுபோகத்தாலேயே அறிய முடியும்.

நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே இல்லை. இந்த இடத்தை வணங்குகின்றோமென்று அவரவர்களுக்குத் தெரியாமலேயே சலாமென்றும், வந்தனமென்றும், நமஸ்காரமென்றும், கும்பிடுகின்றேனென்றும், சொல்லியும்; தங்கள் தங்கள் மத ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும், விபூதி அணிந்தும், நாமம் இட்டும் தங்கள் தங்கள் கையையும், சைகையையும், நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத்தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமுங் கோபமும் பிறப்பதும் அங்கிருந்தேயாகும். மிகுந்த கோபம் ஏற்படும்போது தத்தம் மூக்கு முனையைப் பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும்.

இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப் பொல்லாதவனையும் அவன் நல்லவனாக வேண்டுமென்று அந்த இடத்திலிருந்து நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக் காலத்திலோ நல்லவனாகியே தீருவான் என்பது திண்ணம். ஆகையால்தான் இந்த இடத்திற்கு ஆக்கினை ஸ்தானம் என்று பெயர். ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும் உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

மனிதன் ஆண்டவனை அறியவோ ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண் உணர்வால் பெறப்படும். உடம்பில் பல வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த உணர்ச்சியோடு உறங்கிவிட வியாதியனைத்தும் தீரும். இப்படி அனேக காரியங்கள் தானே உண்டாகும் சந்தர்ப்பங்களும் உண்டு.

பெரிய பெரிய சிற்பிகள் சித்தரிக்கும் சிலைகளுக்குங்கூட அச்சிலைகளின் மீது அன்பும், விசுவாசமும், பயபக்தியும் மக்களிடத்தில் கூட்டுவதற்கு வேண்டி அச்சிலைக்கு நெற்றிக்கண் திறப்பது என்று ஒரு சடங்கை பெரிய விசேடமாகக் கொண்டாடுவதுண்டு. இதைச் செய்ய அந்தச் சிலையை உருவாக்கிய சிற்பியை விட்டு வேறொரு ஆச்சாரியாரைக் கூப்பிடுவார்கள். அவன் அச்சிலைக்கு நெற்றிக்கண் திறந்து விட்டதாகப் பாவனை காட்டுங் காலத்தில் வருடக்கணக்கில் சித்தரித்த சிற்பியும் அச்சிலையை வணங்க ஆரம்பிக்கிறான். அதுபோன்று எப்படிப்பட்ட அறிஞனாயிருந்தாலும் அவனுக்கும் ஒரு குரு அவசியம். ஆகவே நெற்றிக்கண் உணர்வு உண்டாக்கக் குருவும், சிந்தனையும், வயதும் அவசியமாகும்.

உலகில் பலர் பலவிதமாகச் சொல்லுவார்கள். அனுபவமில்லாதவர்கள் சொற்களைக் கேட்பதைவிட, அனுபவமுடையவர்கள் சொற்களைக் கேட்பது உங்களுக்கு நலமாகும்.

நாயகன் செயல் நாயகன் செயலென்று நழுவவிடாமல், நல்லறிவாய் நாட்டம் கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும் நாமும் ஒன்றே.

அதுபோல் உலகத்தில் மிகுதியான குணங்கள் உள்ளன. அந்த குணங்களுக்குரியவர் பலராவர். அவர்களை நீங்கள் குறை சொல்லாமல் அவர்களிடத்தில் உள்ள நல்ல குணங்களை மட்டும் கிரகித்துக்கொள்ளுங்கள்.

கடலில் உள்ள மீனானது கடல் உப்பில் சாராததுபோல் உலகத்திலுள்ள நல்லடியார்களாகிய நீங்கள், உலகத்திலுள்ளதீய செயல்களில் சாரவே மாட்டீர்கள்.

– குறிப்பு நான் கடவுள் புத்தகம்
https://suzhimunai.wordpress.com/